அவையினது திறத்தை அறியாதவர், ஆராய்ந்து பொருந்த அமைதியாகச்சொல்லாதவர், குற்றமின்றிச் சொல்லமாட் டாதவர், அவ்வாறு கூற நாணாதவர்,சொற் பொருட்சுவை யுணரமாட்டாதவர், கலைநுட்பத்தைத் தெரியாதவர்,அஞ்சாதவர், செருக்குடையோர் இன்னோர் குழீஇயுள்ள அவை தீய அவையாம்.(வெண்பாப். பாட். பொ. 11)குறைந்த கல்வியும் நிறைந்த அழுக்காறும் உடையோர் அவை குறைஅவையும்தீஅவையுமாம். (இ. வி. பாட். 176 உரை)