முத்துவீரியம் என்னும் ஐந்திலக்கண நூற்குப் பாயிரம் செய்தவர்.“தன்னாசிரியன் முதலாம் ஐவருள் இந்நூற் (சிறப்புப்) பாயிரம் செய்தார்தகும் உரைகாரராகிய திரு நெல்வேலி மகாவித்துவானாகிய திருப்பாற்கடல்நாதன் கவி ராயர்” – என வருதலின், இவரே இந்நூற்கு உரையாசிரியரும்ஆவார். இவரது காலம் 19ஆம் நூற்றாண்டு.