தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சார்ந்து அமையும் இவ்வூர் இன்று தீர்த்தனகிரி எனச் சுட்டப்படுகிறது. பெரியான் என்னும் பள்ளன் தன் நிலத்தை உழுது கொண்டு இருக்கும் போது இறைவன் அடியாராக வந்து அன்னம் வேண்டினார். அவன் தன் பணியை நிறுத்தி, அடியவரை அங்கேயே இருக்கச்செய்து உணவு கொண்டு வாத் தன் இருப்பிடம் சென் றான். அவன் திரும்பி வருவதற்குள் பருமான் அந்நிலத்தில் தினைவிளைந்திருக்குமாறு செய்து மறைந்தார். வந்த பெரியான் திகைப்புற, அவனுக்குக் காட்சி தந்தார். அதிசயமாகத் தினை விளைந்ததால் சினைநகர் என்னும் பெயர் பெற்றது என்ற புராணக்கதை இந்நகருக்குரியது. படை. சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் எவ்வாறு இப்பெயர் பெற் றது எனக் காணின் தினை வளமிக்க காரணமே என்பது வெளிப் தினைநகர்’பற்றிய சுந்தரர் பாடல்கள் (54) இதன் செழிப்பினை. சேறு தங்கிய திருத்தினை நகர் (1) வார் பொழில் திருத்தினை நகர் (2) செடிகொள் கான்மலி திருத் தினைநகர் (3) செந்நெலார் வயற் திருத்திஎனை நகர் (7) செருந்தி பொன் மலர் திருத்தினை நகர் (8) என்றெல்லாம் சுட்டுகின்றன. எனினும் ஒரே ஒரு பாடல், சிமய மார் பொழிற் றிருத்தினை நகர் (9) எனக் காட்டும் தன்மை, தினை வளரும் மலைப்பகுதியை எண்ணச் செய்கிறது மேலும் தீர்த்தனகிரி என, பிறமொழி மாற்றத்தால் பெற்ற பெயரும் மலையையே எண்ணச் செய் எனினும் இன்று இப்பகுதியில் மலைகள் ல்லாமை, சிறிது தாலைவில் மலைகள் உள்ளமை இவற்றை நோக்க, இப்பகுதி முழுமையும் இப்பெயரால் வழங்கப்பட்டு இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஏனெனில் நகர் என்ற பொதுக்கூறு அதிக பரப்பைச் சுட்டும் நிலையில் இதனையே எண்ணச் செய்கிறது. மேலும் இவ்வூர் பற்றிய பிற எண்ணங்கள் விளக்கம் தரலாம்.. சுந்தரர் பாடல் பெற்றாலும், திருநாவுக்கரசரும் இத்தலம் சென்று வணங்கிப் பாடினார் என்றக் குறிப்பினை, சேக்கிழாரின் பெரிய புராணம் தருகிறது.
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் திருநடம் பணிந்து ஏத்திப்
பரமர் தம் திருத்தினை நகர்பாடி – பெரிய திருநா – 962