திருஇட எந்தை

தொண்டை நாட்டுத் தலமாகிய இப்பதி, மாமல்லபுரம் சென்னை வழியில் உள்ள ஒரு சிறிய ஊர். திருமால் கோயில் கொண்ட ஊர். இறை மேலுள்ள புராணக் கதை ஒன்றின் அடிப் படையில் திரு இடவெந்தை என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது அறிகின்றோம். இப்பெயர் தவிர, இவ்வூருக்கு, நித்திய கல்யாணபுரி, ஸ்ரீபுரி, வராகபுரி என்ற பெயர்களும் அன்று வழங் கின. எனினும் செல்வாக்கு காரணமாகத் திருஇடவெந்தையே இன்று வரை நிலைபெற்ற பெயராக அமைகிறது. இக்கோயில் சிறப்புப்பெற்று, இப்பெயர் செல்வாக்குப் பெறுமுன்பு வேறு பெய ரைக்கொண்டு இவ்வூர் திகழ்ந்ததோ என்ற எண்ணந்தைக் கல் வெட்டுகளில் இவ்வூரின் பெயர் அசுர குல கால நல்லூர் என்ப தைக்காணும் போது ஏற்படுகிறது. மேலும் இப்பெயர் செல்வாக்கில் அசுரகுல கால நல்லூர் என்ற பெயர் மறைவும் தெரியவருகிறது திருமங்கையாழ்வார் பாடல் பெற்றது இவ்வூர் (பெரிய திருமொழி – 2).