திரிபங்கி

திரிபங்கி – முன்றாகப் பிரிவது; மிறைக் கவிகளுள் ஒன்று.ஒரு செய்யுளின் உறுப்புக்களைப் பெற்று ஒரு வகை யாப்பால் வந்தபாட்டினை மூன்றாகப் பிரித்து எழுதினால், வேறு வேறுதொடையாக அமைந்துபயனிலையும் பெற்று முடியும் வகையில் செய்யுளை அமைத்தல்.எ-டு : ‘ஆதரம் தீர்அன்னை போல்இனி யாய்அம்பி காபதியேமாதர்பங் காவன்னி சேர்சடை யாய்வம்பு நீள்முடியாய்ஏதம்உய்ந் தோர்இன்னல் சூழ்வினை தீர்எம் பிரான்இனியாய்ஓதும்ஒன் றேஉன்னு வார்அமு தேஉம்பர் நாயகனே.’கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்த இப்பாடல் ஒன்றனையே,1 2 3‘ஆத ரம்தீர் ‘அன்னைபோ லினியாய்! ‘அம்பிகாபதியே!மாதர் பங்கா வன்னிசேர் சடையாய்! வம்புநீள்முடியாய்!ஏதம் உய்ந்தோர் இன்னல்சூழ் வினைதீர்எம்பிரான் இனியாய்!ஓதும் ஒன்றே! உன்னுவா ரமுதே! உம்பர்நாயகனே!என்று மூன்று பாடலாகப் பிரிப்பினும், அடியெதுகைத் தொடையொடுபொருளும் அமைய, வஞ்சித்துறை என்னும் யாப்பின்பாற்படுமாறு காணப்படும்.(தண்டி. 98 உரை)