தாற்பருவம்

பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்தில் பாட்டுடைத் தலைமக னையோ தலைமகளையோஎட்டாம் மாதத்தில் தாலாட்டு வதாகக் கூறும் மூன்றாம் பருவம். தாலப்பருவம் என்பதும் அது. தால் – நாவு; தாய் பிள்ளையைத் தொட்டிலிலிட்டுநாவசைத்துப் பாடுதலின், இப்பருவம் இப்பெயர்த்தாயிற்று. ஆசிரியவிருத்தம் பத்துப் பாடல்கள் சந்தவின்பம் பெற இது பாடப்பெறும்.