தமிழில் பயின்றுவரும் சந்தக்கலிவிருத்தம்

இது வனமயூர விருத்தம் போலக் குறிலீற்றுத் தேமாங்காய்ச் சீர்வருவது. முதலில் குறிலீற்றுத் தேமாங்காய், அடுத்துக் குறிலீற்றுவிளங்காய், அடுத்துக் குறிலீற்றுத் தேமாங்காய் அடுத்துத் தேமா எனஅமைந்த நாற்சீரடி நான்காய் வருவது.எ-டு : ‘வெங்கார்நி றப்புணரி வேறேயு மொன்றைப்பொங்கார்க லிப்புனல்த ரப்பொலிவ தேபோல்இங்கார்க டத்திரென வென்னாவெ ழுந்தாள்அங்கார தாரைபெரி தாலால மன்னாள்.’ (கம்பரா. 4815)2) தேமா ஒன்று கூவிளம் மூன்று என்றமையும் நாற்சீரடி நான்கான்வருவது.எ-டு : ‘வாழி சானகி வாழியி ராகவன்வாழி நான்மறை வாழிய ரந்தணர்வாழி நல்லற மென்றுற வாழ்த்தினான்ஊழி தோறும் புதிதுறு சீர்த்தியான்’. (கம்பரா. 5168)ஈற்றடியில் ‘தோறும்’ தேமாவாயினும், ‘புதிதுறு’ கருவிள மாயினும் ஓசைகெடாமையின் கொள்ளத் தக்கனவே. (வி. பா. 46, 87)