தனிக்குறில் முன் ஒற்று இரட்டாதன

அவ் இவ் உவ் என்ற வகரஈற்று மூன்று அஃறிணைப் பன்மைச்சுட்டுப்பெயர்க்கு முன்னர் அற்றுச்சாரியை வந்தாலும், அ இ உ என்னும்முச்சுட்டின் முன்னும் எகரவினா முன்னும் இச் சாரியை வந்து வகரமெய்பெற்றாலும் தனிக்குறில் முன் ஒற்று உயிர் வர இரட்டாவாறு கொள்க.(இச்சூத்திரத்து ‘வழி’ என்ற மிகையால் உரையாசிரியர் கொண்டது இது.)(நன். 249 மயிலை.)