சொல் அந்தாதி மடக்கு

எ-டு :கயலேர் பெறவருங் கடிபுனற் காவிரிகாவிரி மலருகக் கரைபொரு மரவமரவப் பூஞ்சினை வண்டொடு சிலம்பும்சிலம்புசூழ் தளிரடித் திருமனைக் கயலே.‘கயல் ஏர் பெற வரும் கடிபுனல் காவிரி, காவிரி மலர் உகக் கரை பொரும்அரவம், மரவம் பூஞ்சினை வண்டொடு சிலம்பும், சிலம்புசூழ் தளிரடி (தலைவி)திருமனைக்கு அயலே’ எனப் பிரித்துப் பொருள் செய்யப்படும்.“கயல்மீன்கள் எழுச்சி பெறப் பெருக்கெடுத்து வரும் நறுமண மிக்கபுனலையுடைய காவிரியாறு, சோலையில் விரிந்த மலர்கள் கீழே உகுமாறுகரையைத் தாக்கும் ஒலி, மரவமரத் தில் பூக்கள் செறிந்த கிளைகளில் உள்ளவண்டொலியோடு ஒலிக்கும். இங்ஙனம் ஒலிக்கும் இடம் சிலம்பு அணிந்தஅணிகளால் சூழப்பட்ட தளிர் போன்ற அடிகளையுடைய தலைவியின் மனைக்குஅருகின்கண்ணேயாம்” என்று பொருள்படும் இப்பாடற்கண், கயல் காவிரி. மரவம்சிலம்பு என்னும் சொற்கள் அந்தாதியாக வந்தமை சொல்லந்தாதி மயக்காம்.(அந்தாதி மண்டலித்தும் வந்தவாறு.) (தண்டி. 96)