சொல்லிசை அளபெடை

தேற்றப்பொருள், சிறப்புப்பொருள் – இவை குறிக்க வரும் அளபெடைகள்‘இயற்கை அளபெடை’ என்பர் நச்சினார்க் கினியரும் பேராசிரியரும்.எ-டு : அவனேஎ நல்லன்; அவனோஒ கொடியன்(தொ. பொ. 329 பேரா., நச்.)வடமொழிக்கண் அளபெடைகள் சேய்மைவிளி முதலியவற் றுக்கண் அன்றித்தமிழ்மொழியிற் போல இசை குன்றியவழி மொழிக்கண் வருதல் இல்லை.அளபெடையாவது தொல் காப்பியனார் கருத்துப்படி நீரும் நீரும் சேர்ந்தாற்போல்வ தும், கோட்டுநூறும் மஞ்சளும் கூடியவழிப் பிறந்த செவ் வண்ணம்போல்வதும் அன்று; அது விரலும் விரலும் சேர்ந்தாற் போல்வது. ஆஅழிஎன்பது மூவெழுத்துப் பாதிரி (கூவிளம்) என்று பேராசிரியரும்நச்சினார்க்கினியரும் குறிப்பிட் டுள்ளமை இக்கருத்தைவலியுறுத்தும்.முதனிலைகளொடு து(த்) அல்லது இ சேர்ந்து இறந்தகாலத்தை உணர்த்துதல்தமிழ்வழக்கு.செய் + து = செய்து தட + இ = தடைஇஓடு + இ = ஓடி கட + இ = கடைஇபோகு + இ = போகி கவ + இ = கவைஇகொள் + இ = கொளீஇ பச + இ = பசைஇசெல் + இ = செலீஇ நச + இ = நசைஇ(அகரம் ஐகாரம் ஆயின)ஆதலின் வினையெச்ச விகுதியாகிய இகரம் சேர்ந்தது. சேர்ந்த இகரத்தைக்குறிப்பிட அறிகுறியாய் வரும் இகரத்தைக் கொண்டு பசைஇ முதலிய சொற்களைச்சொல்லிசை அளபெடை என்று குறிப்பிடுதல் சாலாது.பச + இ = பசைஇ; நச + இ = நசைஇநசை என்ற பெயர் வினையெச்சமானதால் அது சொல்லிசை அளபெடை என்றுகூறுதல் சாலாது. ஒருசொல் மற்றொரு சொல் ஆதற்கண் வரும் அளபெடையேசொல்லிசை அள பெடையெனின், குரீஇ என்பதன்கண் உள்ள அளபெடை எவ்வளபெடைஆகும்? அதற்கு வேறொரு பெயரிடல் வேண்டும். நன்னூலார் அளபெடை 21வகைப்படும் என்றார். ஒளகாரம் சொல்லின் இடையிலும் ஈற்றிலும்வாராமையால், அளபெடை 21 வகைப்படுதற்கு வாய்ப்பு இன்றாய், ஆ ஈ ஊ ஏ ஐ ஓஎன்பன முதலிடைகடைகளிலும், ஒளகாரம் முதலி லும் வருதலின் 19 வகையதாகவே,ஏனைய இரண்டு எண் ணிக்கையை நிரப்ப, இன்னிசை அளபெடை சொல்லிசை அளபெடைஎன்பனவற்றைக் கொள்ளுதல் சாலாது. இன் னிசையும் சொல்லிசையும்மேற்குறிப்பிட்ட 19 வகையுள் அடங்கிவிடும். (எ. ஆ. பக். 41, 42, 43,44)‘உரன சைஇ உள்ளம் துணையாகச் சென்றார்வரன சைஇ இன்னும் உளேன்’ (குறள். 1263)என அளபெடுத்துச் சொல்லிசை நிறைக்க வருவனவும் கொள்க. சொல்லிசைநிறைத்தலாவது: நசை என்பது ஆசை; ஆசைப்பட்டு என வினையெச்சம்நிறைதற்பொருட்டு நசைஇ என அளபெடுத்து நிற்கும். (நன். 91 இராமா.)வினைமுற்று வினையெச்சம் பெயரெச்சம் என்னுமிவை ஈறு திரிந்துஅளபெடுத்து வருவனவும், தன்வினையைப் பிறவினை யாக்க அளபெடுத்துவருவனவும் சொல்லிசை அளபெடை யாம்.எ-டு : நிறுத்தும் – நி றூஉம் : பெயரெச்சமும் முற்றும் திரிந்து அளபெடுத்தவாறு.செலுத்தி – செ லீஇ, உடுத்தி – உ டீஇ, அளவி – அ ளைஇ என வினையெச்சம் திரிந்து அளபெடுத்த வாறு.துன்புறும், இன்புறும் என்ற தன்வினைகள் துன்புறூஉம் இன்புறூஉம் எனஅளபெடுத்துப் பிறவினைப் பொருள வாயின (குறள். 94) துன்புறும் – தான்துன்புறும்; துன்புறூஉம் – பிறரைத் துன்புறுத்தும்.இவையாவும் சொல்லிசை அளபெடையாம். (நன். 91)