செய்யுளிலுள்ள சொற்கள், பரியாயச் சொற்களாக மாற்றப் படின் அணிகெடுவது சொல்லணி. முல்லை நகைத்தன என்றதற்கு முல்லை பூத்தன என்றுகூறின் அணி நில்லாது. (தொ. வி. 302 உரை)இச் சொல்லணி மறிநிலை அணி, சொல் மிக்கணி, சொல் எஞ்சணி, சொல் ஒப்பணிஎன நான்கு வகையாம். (தொ. வி. 303)மறிநிலை 5, பொருள்கோள் 8, சொல் மிக்கணி 3, சொல் எஞ்சணி 10, சொல்ஒப்பணி 4, ஆகச் சொல்லணி விரி 30 என்னும் தொன்னூல் விளக்கம். (325)சொல்லணியை மடக்கு, சித்திரகவி என இருவகைப்படுத்தும்தண்டியலங்காரம். (92, 98)