சேகாநுப்ராஸம்

இரண்டிரண்டு மெய்கள் உயிர் ஏறப்பெற்று இடைவிடாது மறுத்துவருவது.எ-டு :‘பண்டு பண்டவழ் நாவினொர் பாவைதெம்மண்டு மண்டலத் தோரவை மாழ்கிமன்கொண்ட கொண்டலன் னாய்நின் திருப்பெயர்கொண்டு கண்டனன் கோதைப் புறத்தையே’.இதன்கண் ண், ட் என்பனவற்றுள் டகரத்தின்மேல் உயிரேறிவந்துள்ளது.அநுப்ராசம் – வழி எதுகை (யா. வி. பக். 208). வல்லொற்றை அடுத்துக்கொண்ட மெல்லொற்று வழிஎதுகையை வட நூலார் ‘சேகாநுப்ராஸம்’ என்பர். இஃதுஇணையெதுகை அலங்காரம் என்று மாறன் அலங்காரத்துள் கூறப்பட்டுள் ளது.(பக். 277)சொல்லும் பொருளும் ஒன்றாகவே தொடர்ந்து குறிப்பினால் பொருள்மாறுபடுதல் ‘லாடாநுப்ராஸம்’ (பிரதாபருத்ரீயம் சப்தாலங்கார ப்ரகரணம் -1 (5)) (L)