செய்யுள் இயல்

ஐந்து இலக்கணங்களும் கூறும் நூல்களுள் யாப்பிலக்கணம் கூறும் பகுதி.தொல்காப்பியத்துள் பொருளதிகாரத்தில் எட்டாவதாக இவ்வியல் இடம் பெறும்.இச்செய்யுளியலின் தலைமையும் சூத்திரப் பன்மையும் பற்றித் தொல்காப்பியனாரை யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் முதலியோர்‘செய்யுளியலுடையார்’ என்று குறிப்பர். (யா. வி. பக். 125, 205).யாப்பு நூல்களிலும் சிதம்பரம் பாட்டியலிலும் செய்யுளியல் நால்வகைச்செய்யுள்களையும் அவற்றின் இனங்களையும் கூறும் பகுதியின் பெயராகஅமைகிறது.