பலவகைச் செய்யுள்களுக்கும் அவற்றின் உறுப்புக்களுக்கும் அளவைகள்கூறப்பட்டுள்ள நூல் இது. (யா. வி. பக். 310) இந் நூல் அகத்தியத்தின்வழியில் சிறிதும் முரணாமல் தோன்றிய இலக்கணமாம். செயிற்றியம்மெய்ப்பாடு பற்றியும் நுவல்வ தாகப் பேராசிரியரும் (தொ.பொ. 249 பேரா.)இளம்பூரணரும் (தொ.பொ. 245, 249) குறிப்பிடுகின்றனர்.