செயிற்றியம்

பலவகைச் செய்யுள்களுக்கும் அவற்றின் உறுப்புக்களுக்கும் அளவைகள்கூறப்பட்டுள்ள நூல் இது. (யா. வி. பக். 310) இந் நூல் அகத்தியத்தின்வழியில் சிறிதும் முரணாமல் தோன்றிய இலக்கணமாம். செயிற்றியம்மெய்ப்பாடு பற்றியும் நுவல்வ தாகப் பேராசிரியரும் (தொ.பொ. 249 பேரா.)இளம்பூரணரும் (தொ.பொ. 245, 249) குறிப்பிடுகின்றனர்.