பலவகைச் செய்யுள்களுக்கும் அவற்றின் உறுப்புக்களுக்கும் அளவுகூறுதல் பற்றி எழுந்த நூல் இது. “கலியுறுப்புக்கு அளவை, செயல்முறையில்கண்டுகொள்க” (யா.வி. பக். 298) முதலாயின வந்தவாறு காண்க. தலையளவுஅம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாப் பெருந்தேவபாணி ஆறடித் தரவு,நான்கடித் தாழிசை மூன்று, இரண்டடி அராகம் ஒன்று, பேரெண் இரண்டு,இடையெண் நான்கு, சிற்றெண்எட்டு, தனிச்சொல், ஆறடிச் சுரிதகம் என்றஅமைப்பில் பாடப்படு வது செயல்முறையில் சொல்லப்பட்ட தொரு செய்தியாகும்.(யா. வி. பக். 310)