தோலாமொழித்தேவர் இயற்றிய சூளாமணி என்னும் இச்சிறு காப்பியச்செய்யுள் சில பாதிச் சமவிருத்தம், சம விருத்தம், அளவழிப் பையுட்சந்தம், எறும்பிடைச் சந்தம், பாதிச்சமப் பையுட் சந்தம், அளவழிச்சந்தப்பையுள், நேரசை முதலாய் அடிதோறும் 12 எழுத்தும் 14 எழுத்தும்பெற்று வரும் சந்தச் செய்யுள் என்பனவற்றிற்கு யாப்பருங்கலவிருத்தியுள் எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளன. (யா. வி. பக்.516-518; 520-522 உரை)