12 சருக்கங்களையும் அவற்றுள் 2131 பாடல்களையும் உடைய இந்நூலுள்கலிவிருத்தம் 1210, அறுசீர் ஆசிரிய விருத்தம் 735, பலவகைக்கலித்துறைகள் 92, எழுசீர் ஆசிரிய விருத்தம் 40, வஞ்சி விருத்தம் 31,எண்சீர் ஆசிரிய விருத்தம் 14, தரவு கொச்சகம் 8, வஞ்சித்துறை 1வந்துள்ளன. ஒரு பொருள்மேல் மூன்றடுக்கிய பாடல் 24 உள்ளன. இவை வஞ்சிவிருத்தம், கலி விருத்தம், கலித்துறை, அறுசீர் விருத்தம் என்றயாப்பைச் சார்ந்தன. (இலக்கணத். முன். பக். 98, 99)ஏனைய பல பாவினங்களொடு, முதலடியாக நான்காம் அடியாகும். இரட்டையாப்புவிசேடமாயதோர் யாப்பு.‘ஓடு மேமன மோடுமேகூடு மோதணி கோதையாய்காடு சேர்களி காண்டொறும்ஓடு மேமன மோடுமே’ என்பது. (1619)மற்று, முதற்சீர் ஒத்து வருதல், முதல் இருசீர் ஒத்து வருதல்,இரண்டாம் நான்காம் சீர் அடிதோறும் ஒத்துவருதல், இடையடி மடக்கி வருதல்,அவை அந்தாதியாக வருதல் போன்ற பிற நயமான வேறுபாடுகளையும் ஆங்காங்குக்காண்டல் கூடும்.