சுவாகதச் சந்த விருத்தம்

இஃது அடிக்குப் பதினோர் எழுத்துக்கள் வரும் வடமொழி விருத்தம். இதன்அமைப்பு 1) இடையில் இலகு வந்த கணம், 2) முற்றும் இலகுவான கணம், 3)முதலிற் குருக்கணம் ஈற்றில் இரு குருக்கள் என வருவது. இவ்வமைப்புஉதாரணத்தில் முற்றும் உள்ளது.அ) குற்றெழுத்தீற்று மாச்சீர் ஒன்று, மூன்று குற்றெழுத்துக்காய்ச்சீர் ஒன்று, கூவிளம் தேமா – என்ற இவை முறையே அமைந்த அடிநான்காகி வருவது. இரண்டாமடியிலும் நான்காமடியிலும் வந்த 2ஆம்சீர்களின் இறுதியில் உள்ள ஒற்றெழுத்துக்களை நீக்கியே அமைப்புக்காண்டல் வேண்டும்.எ-டு : ‘ஊரு லாவுபலி கொண்டுல கேத்தநீரு லாவுநிமிர் புன்சடை அண்ணல்சீரு லாவுமறை யோர்நறை யூரில்சேரும் சித்திசுரம் சென்றடை நெஞ்சே’. (தே. I 29-1) (வி.பா.பக். 47, 48)ஆ) மேற்கண்ட கலிவிருத்தம் இரட்டித்து எண்சீர்க் கழிநெடி லடி ஆசிரியவிருத்தமாகவும் அமையும். கீழ்வரும் பாடலில் எட்டு அரையடிகளில் மூன்றுநீங்கலாக ஏனைய வற்றில் இரண்டாம் சீரில் மூன்று குற்றெழுத்துக்கள்இறுதி யில் இணைந்து வந்தவாறு காணப்படும்.எ-டு : ‘வேட்ட நல்வரம ளித்துவி டுக்கும்வீறி லார்கள்பலர் விண்ணவர் மாட்டும்வேட்ட நல்வரம னைத்தும்வ ழங்கல்வேட்ட மாத்திரைவி ளைப்பவர் சில்லோர்வேட்ட நல்வரம ளித்ததன் மேலும்வேறு நல்வரம்வி னாவிய ளிப்பவேட்ட வண்ணங்கரு ணைத்திற நோக்கிவிம்மி தப்புணரி விம்முமு ளத்தான்’(தணிகைப். பிரமன். 97) (வி. பா. பக். 78)