கவிமுதி யார் பாவேவிலையரு மா நற்பாமுயல்வ துறு நர்திருவ ழிந்து மாயாஇது, செவ்வே யெழுதிய நாலடி நான்கு வரியுள், முதலடிமுதலெழுத்தினின்றும் சுழி ரேகை வழியே மேனின்று கீழிழிந்தும்,கீழ்நின்று மேலேறியும், புறநின்று வந்துள் முடிய இடஞ்சுற்றிப் படிக்கநாலடியு முடியுமாறு காண்க.