யாப்பருங்கலத்துள் சீரினைப் பற்றி விளக்கும் பகுதி. முதலாவதாகியஉறுப்பியலுள் மூன்றாவது. இதன்கண் மூவகைச் சீர்கள், இயற்சீரின் திறம்,தொகை, உரிச்சீரின் திறம், வகை, பொதுச்சீராவன, ஓரசைச்சீர், நால்வகைச்சீரும் செய்யுளுள் நிற்கும் முறை, கலியினும் ஆசிரியத்தினும் வரும்தனிச்சீர்கள் என்னும் செய்திகள் இடம் பெறுவன. இவ் வோத்தின்கண் ஏழுநூற்பாக்கள் உள்ளன.