சிவஞான முனிவர்

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்பெரும்புலவர் வடமொழி தென்மொழிஇரண்டிலும் மிக்க புலமை சான்றவர். இருமொழியிலும் இலக்கிய இலக்கணங்களைநுணுகிப் பயின்றவர். சைவ சித்தாந்தச் சாத்திரப் பயிற்சியிலும்வல்லுநர். திருநெல்வேலி மாவட்டத்தில் விக்கிரமசிங்க புரத்தே சைவவேளாளர் குலத்தில் ஆனந்தக் கூத்தர் என் பார்க்கு மயிலம்மையாரிடத்துத்தோன்றிய இவரது பிள்ளைத் திருநாமம் முக்களாலிங்கர் என்பது. திருவாவடுதுறையைச் சார்ந்து அங்கு எழுந்தருளியிருந்த வேலப்ப தேசிகராம்ஞானசிரியர்பால் சிவதீட்சையும் சைவத் துறவும் சிவஞானயோகி என்னும்தீட்சா நாமமும் பெற்று, சைவ ஆகம நூல்களைக் கற்றுத் தெளிந்து, மெய்கண்டசாத்திரங் களையும் பண்டாரச் சாத்திரங்களையும் அவர்பால் ஐயம் திரிபறக்கற்றார்; வடமொழி தென்மொழி யிரண்டிலும் பெரும்புலமை பெற்றுச்சைவசித்தாந்த வாழ்வே தமது உயிராகக் கொண்டு வாழ்ந்தார்.இலக்கியம் இலக்கணம் தருக்கம் சித்தாந்த சாத்திரம் முதலியன இவர்பால்பாடம்கேட்ட மாணாக்கர் பலராவர். குறிப்பாக அவர்களுள் கச்சியப்பமுனிவர், தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர், இலக்கணம் சிதம்பரநாதமுனிவர் முதலாகப் பன்னிருவர் புகழ் மிக்கவர் என்பர்.இப்பெருமானார் இயற்றிய நூல்களும் பண்டை நூல்கள் ஆகியவற்றின்உரைகளும் குறிக்கத்தக்கன: காஞ்சிப் புராணம் முதற்காண்டம். சோமேசர்முதுமொழி வெண்பா, குளத் தூர்ப் பதிற்றுப்பத் தந்தாதி, இளசைப்பதிற்றுப்பத்தாதி, கலைசைப் பதிற்றுப் பத்தந்தாதி, கச்சி ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு, கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், குளத்தூர் அமுதாம்பிகைபிள்ளைத்தமிழ், செப்பறைப்பதி இராசை அகிலாண்டேசு வரி பதிகம்,திருவேகம்பர் அந்தாதி, திருமுல்லைவாயில் அந்தாதி, திருத்தொண்டர்திருநாமக் கோவை, பஞ்சாக்கர தேசிகர்மாலை, கம்பராமாயண முதற்செய்யுள்சங்கோத் தரவிருத்தி என்பன இலக்கியங்கள்;தொல்காப்பியச் சூத்திர விருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி, நன்னூல்விருத்தியுரைத் திருத்தமாகிய புத்தம் புத்துரை என்பன இலக்கண நூல்உரைகள்:தருக்க சங்கிரகமும் அன்னம் பட்டீயமும், திராவிட மாபாடியம்எனப்படும் சிவஞானபாடியம், சிவஞானபோதச் சிற்றுரை, சிவஞான சித்திப்பொழிப்புரை – சுபக்கம், சித்தாந்தப் பிரகாசிகை, அரதத்தாசாரியார் சுலோகபஞ்சக மொழிபெயர்ப்பு, சிவதத்துவ விவேகம், சித்தாந்த மரபு கண்டனம்,‘என்னை இப்பருவத்தில்’ என்னும் செய்யுட் சிவசமவாத உரைமறுப்பு,‘எழுத்து’ எனும் சொல்லுக்கு இட்ட வைரக் குப்பாயம் என்பன. சைவமதச்சார்புடைய, இவரால் இயற்றப்பட்ட பிற நூல்கள். (தமிழ் பக். 169 -172)