சங்க காலத்தனவாகிய பத்துப்பாட்டு எட்டுத் தொகைபோல ஆசிரியம் வெண்பாகலி வஞ்சி பரிபாடல் என்ற யாப்போடு அமையாமல் சிலப்பதிகாரமானதுஉரைபெறுகட்டுரை, உரைப்பாட்டு, கருப்பம், கலி ஆசிரிய இணைப்புப்பா,ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், ஆசிரியத்துறை, ஆசிரியத்தாழிசை,கலித்தாழிசை என்ற பாவினங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.ஆசிரிய விருத்தம் – கானல்வரி, ஆற்றுவரி முதலியன.கலி விருத்தம் – முரிவரி முதலியன.ஆசிரியத்துறை – கானல்வரியுள் முகமில்வரி, கானல்வரி முதலியன.ஆசிரியத் தாழிசை – ஆய்ச்சியர் குரவையுள் ‘கன்றுகுணிலா’ முதலியமூன்றும்.தரவு கொச்சகம் – ஆய்ச்சியர் குரவையுள் முன்னிலைப் பரவல்,படர்க்கைப்பரவல் முதலியன.கலித்தாழிசை – குன்றக் குரவையுள், சிறைப்புறம் முதலியன.உரைநடை போன்ற சீர்வரையறையின்றிப் பொருள் பொதிந்த சொற்களால் இனியதீவிய நடையில் அமைவது.எ-டு : ‘அன்று தொட்டுப் பாண்டியனாடு மழைவறங்கூர்ந்து வறுமையெய்தி வெப்புநோயும் குருவும் தொடரக் கொற்கையிலிருந்தவெற்றிவேற்செழியன் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய, நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமும்நீங்கியது’.உரைநடை போன்று அடிசீர் என்ற வரையறையின்றி வரும் பாடல்களைப்பொருத்தி யமைப்பது.எ-டு :‘குருவி யோப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச்சென்றுவைகிஅருவியாடியும் சுனைகுடைந்தும் அலவுற்று வருவேமுன்மலைவேங்கை நறுநிழலில் வள்ளிபோல்வீர் மனநடுங்கமுலையிழந்து வந்துநின்றீர் யாவிரோ என முனியாதே’ (சிலப். 24 :1-24)பின் நிகழ்ச்சிக்குரிய செய்தியைத் தாங்கிவரும் பகுதி இது.கலியடியும் ஆசிரிய அடியும் கொள்ளும் சீர்கள் விரவி உரை போல அடிவரையறைசெய்ய இயலாது அமைவதும் உண்டு.எ-டு :‘குடத்துப்பால் உறையாமையும் குவியிமி லேற்றின்மடக்கண்ணீர் சோருதலும் உறியில் வெண்ணெயுருகாமையும்மறிநுடங்கி யாடாமையு மான்மணிநிலத் தற்றுவீழ்தலும்வருவதோர் துன்பமுண்டென மகளைநோக்கி மனமயங்காதேமண்ணின்மாதர்க் கணியாகிய கண்ணகியும் தான்காணஆயர்பாடியி லெருமன்றத்து மாயவனுடன் தம்முனாடியவாலசரிதை நாடகங்களில் வேனெடுங்கண்பிஞ்ஞையோடாடியகுரவை ஆடுதும் யாமென்றாள் கறவைகன்று துயர்நீங்குக என்னவே.’(சிலப். 17-5)எ-டு :‘என்றுதன் மகளைநோக்கி தொன்றுபடு முறையானிறுத்திஇடைமுது மகளிவர்க்குப் படைத்துக்கோட் பெயரிடுவாள்குடமுத லிடைமுறை யாக்குரல் துத்தம்கைக்கிளை யுழையிளி விளரி தாரமென,விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே’. (சிலப். 17-13)இதன்கண் முதலீடியும் கலியடி; ஏனைய ஆசிரியஅடி.