அரசனுடைய சின்னங்களை விரித்துக் கூறுதலால் சின்னப்பூ ஆயிற்று.தகுதி பெற்ற தசாங்கத்தினை (மலை, ஆறு, நாடு, ஊர், பறை, பரி, களிறு,தார், பெயர், கொடி என்னும் இவற்றை)ச் சிறந்த நேரிசை வெண்பாவினால்நூறு, தொண் ணூறு, எழுபது, ஐம்பது, முப்பது என்னும் எண்படப் பாடின் அதுசின்னப்பூவாம். (இ. வி. பாட். 86)வண்ணக ஒத்தாழிசைக் கலியுள் தாழிசைகட்கும் சுரிதகத்திற் கும் இடையேவரும் உறுப்பு ‘எண்’ எனப்படும். ஈரடி இரண்டான் வரும் எண். பேரெண்;ஓரடி நான்கான் வருவது சிற்றெண்; இருசீர் எட்டான் வருவது இடையெண்;ஒருசீர் பதினாறான் வருவது அளவெண் எனப்பட்டன. ஆகவே, ஒரு சீராகியமுடிவிற்கு எல்லையாக நிற்கும் அளவெண் ‘சின்னம்’ எனப் பெயர் பெறும்.(தொ. செய். 145 நச்.)