சிந்து

ஈரடி அளவொத்து அமைவது சிந்து (பஞ்ச மரபு). இவ் வடிகளுக்கிடையேதனிச்சீர் அமைவது ஒருவகை. ஒவ்வோர் அடியும் இருபகுப்புற்று இடையேதனிச்சீர் பெறுதலும் உண்டு. முதற்பகுப்புக்கும் இரண்டாம்பகுப்புக்கும் இடையே சிறு ஓசை நிறுத்தம் நிகழ்கிறது. தனிச்சீரால்நிகழ்கின்ற ஓசை நீட்சி சிந்தின் தனிச்சிறப்பு. முன்னிலைப்படுத்தும்நிலையிலும் தொடர்ச்சிதரும் நிலையிலும் பொருள் பொருத்தத்துடன்இத்தனிச்சொல் அமைகிறது.ஈரடி அல்லது இருபகுதி அளவொத்து வருதல் சிறிதே மாறுபட்டு ஓசை சிந்திநிற்றல் இங்கு அமைகிறது. இவ் வோசை சிந்துதலிலும் நிலைத்த அமைப்புண்டு.இவ்வியல் புகளே இலக்கணமாக இப்பா இப்பெயர் பெற்றது.பிறிதொருவகைச் சிந்து அளவொத்த ஈரடிகள் இவ்விரண் டாய்த் துண்டுபட்டுஅவற்றிடையே தனிச்சீர் உடைத்தாய் நாற்சீர் இரட்டை என்ற பெயருடன்அமைவது. ஒவ்வோ ரடிப் பகுதியும் நாற்சீர் பெறுவது இது. இவற்றின்கண்அடிகளின் ஈற்றில் வரும் இருசீரும் இயைபாக அமைகின்றன.அடிப்பகுதிகள் முச்சீர் பெறுவது முச்சீரிரட்டை, இருசீர் பெறுவதுஇருசீரிரட்டை. (சிந்துப் பாடல்களின் சொற்கள் மிருதங்கத் தாளத்தை ஒட்டிஅமைக்கப்பட்டவை; அசைசீர் வரையறைகொண்டு அமைக்கப்பட்டன அல்ல.)(இலக்கணத். முன். பக். 99, 100)சிந்தடி ‘சிந்து’ எனவும்படும். (யா. கா. 12)