சிந்தியல் வெண்பாச் சிதைந்து தனித்து வருவது வெண் டாழிசையின்ஒருவகை.எ-டு : ‘நண்பி தென்று தீய சொல்லார்முன்பு நின்று முனிவு செய்யார்அன்பு வேண்டு பவர்’.இது வெண்பா இலக்கணம் பெரும்பான்மையும் சிதைந்து சிந்தியல்வெண்பாப்போலவே மூன்றடியான் நடந்து, ஈற்றடி முச்சீராய்த் தனித்து வந்தவெண்டாழிசை.(வீ. சோ. 121 உரை)