திருத்தக்கதேவர் இயற்றிய சீவக சிந்தாமணியின் பாடல் ஒன்று பாதிச்சமவிருத்தத்திற்கு எடுத்துக்காட்டாகவும் (பாடல் 1488), கடவுள்வாழ்த்தாகிய முதற்பாடல் நேரசை முதலாய் அடிதோறும் 14 எழுத்துப் பெற்றுவண்ணத்தான் வந்த நாலடிச் செய்யுட்கு எடுத்துக்காட்டாகவும் உரையுள்சுட்டப்பட்டுள்ளன. (யா. வி. பக். 516,521)