இரசவாதிகள் தம் திறமையை ஒரு தலைவனுக்கு எடுத்துக் கூறுவதாகச்செய்யப்படும் செய்யுள்; கலம்பக உறுப்புக் களுள் ஒன்று. இரசவாதமாவதுஓர்உலோகத்தை மற்றோர் உலோகமாக மாற்றுதல். சித்தர் என்பார் இரும்புமுதலிய இழிந்த உலோகங்களைப் பொன் முதலிய உயர்ந்த உலோகங் களாகப்படைக்கும் வல்லமை உடையவர்.எ-டு : ‘பொற்பாவைக்குக் கஞ்சம் பொன்னாக்கிய சித்தரேம்திருமாலுக்(கு) இரும்பைப் பொன்னாக்கினேம்ஈயத்தை வெள்ளியதாக உருக்குவோம்.’வெண்கலத்தைப் பொன்னாக்கிய சித்தர்: பொற்றாமரை மலரைச் செய்துகொடுத்த சித்தர் யாங்களே என்பது.இரும்பைப் பொன்னாக்கினேம் – பெரிய காளீயன் என்னும் பாம்பின்படத்தை(க் கண்ணனுக்கு) நடிக்கும் இடமாச் செய் தோம்; ஈயத்தை வெள்ளியதுஆக உருக்குவோம் – ஈயத்தை நல்ல வெண்ணிறமாகுமாறு உருக்குவோம்.பொற்பாவைக்குக் கஞ்சம் (-வெண்கலத்தைப்) பொன் ஆக்குதல் -திருமகளுக்குப் பொற்றாமரைப் பூவினைக் கொடுத்தல். இவ்வாறு சிலேடையாகமற்றொரு பொருள் அமையப் பாடுதல் சிறப்பு. (திருவரங்கக். 42)