சிதம்பரச் செய்யுட் கோவை

17ஆம் நூற்றாண்டில் தோன்றிய தெய்வ அருள் பெற்ற பெரும் புலவரானகுமரகுருபர அடிகளால் பாடப்பட்ட அரியதோர் இலக்கியம். வைணவ மாறன்பாப்பாவினம் என்ற யாப் பிலக்கணத்தை ஒருபுடை ஒத்தது இது. பாடல்கள்சிவபெருமானைப் போற்றுவன. யாப்பருங்கலக் காரிகையுள் சுட்டப்பட்ட பாப்பாவினம் அனைத்திற்கும் இந்நூலுள் காணப்படும் 84 செய்யுளும் சிறந்தஎடுத்துக்காட்டாவன. செய்யுள்களின் கீழ்க்குறிப்பு அடிகளே வரைந்தவைஎன்பர். அக்குறிப்புக்கள் திட்பநுட்பம் சான்றவை.