சிக்கற்பள்ளி

சேரமான்‌ செல்வக்‌ கடுங்கோவாழியாதன்‌ சிக்கற்பள்ளியில்‌ துஞ்சியதாகத்‌ தெரிகிறது. சேரமான்‌ சிக்கற்பள்ளி துஞ்சிய செல்வக்‌ கடுங்கோ வாழியாதன்மீது குண்டுகட்‌ பாலியாதன்‌ என்ற புலவர்‌ பாடிய சங்க இலக்கியப்‌ பாடல்‌ (புறம்‌ 387) ஒன்று உள்ளது. இவ்வூரைப்‌ பற்றிய பிற செய்திகள்‌ ஒன்றும்‌ அறிய முடியவில்லை.