சாமிநாதம்

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பொதிகை நிகண்டு என்ற நிகண்டுநூலை வரைந்த கல்லிடையூர் வேளாண்குலத் திலகரான சாமிகவிராயரால் எண்சீர்ஆசிரிய விருத்த யாப்பில், அந்தாதித் தொடையில், ஒவ்வோரதிகாரமும்மும்மூன்று இயல்களைக் கொண்டதாய், ஐந்து அதிகாரங் களையும் நுவலும்ஐந்திலக்கண நூலாய், பொதுப்பாயிரமும் நூன்மரபும் உட்பட 213 விருத்தச்செய்யுட்களில், நன்னூல், சின்னூல், இலக்கணவிளக்கம், இலக்கணக்கொத்து,பிரயோக விவேகம், நம்பிஅகப்பொருள், புறப்பொருள்வெண்பா மாலை,யாப்பருங்கலம், காரிகை, தண்டியலங்காரம், பாட்டியல் நூல்கள் – எனஇவற்றை அடியொற்றி, அருகிய சிற்சில மாற்றங்களோடு புனையப்பட்ட நூல் இது.எழுத்து – 33; சொல் 37; பொருள் – 81; யாப்பு – 27; அணி – 24 என்றஎண்ணிக்கை உடைய விருத்தங்களால் மூலம் மாத்திரம் பாடப்பட்ட சாமிநாதம்என்னும் இந்நூல், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தாரால் உரையோடுவெளியிடப்பட் டுள்ளது. உரை மிகவும் செப்பம் செய்யப்படும் நிலையிலுள்ளது. ‘சுவாமிநாதம்’ என நூற்பெயர் குறிக்கப்பட்டுள்ளது.