சாத்துவி விருத்தம்

கூவிளச்சீர் முன்னும் கருவிளைச்சீர் பின்னுமாக எழுசீர் வந்துசெய்யுள் இறுதியில் நெட்டெழுத்துப் பெறும் அடிகளை நான்காக உடையவிருத்தம்.எ-டு : ‘போனதும் வருவதும் கருதுதல் தவிர்ந்துகொள்புசிப்பினுள் கிடைத்ததை மாந்திமேனியில் உடுத்துடை அருந்துதல் இரண்டையும்விருப்புடன் அளித்திடின் ஏற்றுநானெனத் தவநெறி தனிநடந் துளக்கடிநணுகிய துறவிகள் நாணும்வானவர்க் சரசென வருமொரு மழவனைவணங்கடி யவர்க்கிலை மாலே’ (வி. பா. 10ஆம் படலம் 2)