இவர் திருத்தணிகையிலே வீரசைவர் குலத்திலவதரித்துச் சென்னையிலேயிருந்து தமிழ்க்கலை வளர்த்து இற்றைக்கு முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னே அருவுடம்பு கொண்டவர் நாலடியார், நன்னூல், நைஷதம், திருவள்ளுவமாலை, நன்னெறி முதலிய நூல்களுக்குரையும், பூகோயதீபிகை, பாலபோத இலக்கண முதலிய நூல்களும் செய்தவர் இவரே. இவர் செய்த திருவள்ளுவமாலையுரை மிக்க திட்ட நுட்பமமைந்து புலவோருள்ளத்திற்கு அதிசயானந்தம் பயப்பது இவர் செய்த நைஷதவுரை முற்றுப் பெற்றிருக்குமாயின் அதற்கிணை பிறிதொன்றெக்காலத்து முளதாகாது