அ) 1, 3 – குற்றெழுத்து ஈற்றுமாச்சீர், 2,4 – விளச்சீர் கொண்ட அடிநான்காய் அமைவது.எ-டு : ‘துலாம ணிந்தவர் சூளி கைத்தலைத்துலாமி வர்ந்தெழும் சோம திக்கினன்நிலாவி ரும்பொருள் நிறைந்த தாமெனநிலாவு மத்தலை யிவர்ந்து நிற்குமே’. (தணிகைபு.)ஆ) இதே அமைப்பில் 1 மாச்சீர், 2, 4 விளச்சீர், 3 முழுதும்புளிமாச்சீர் என்ற அமைப்பைக் கொண்ட நான்கடியாய் வருவது.எ-டு : ‘எழுது குங்குமத் திருவி னேந்துகோடுழுத மார்பினா னுருகி யுள்ளுறத்தழுவி நிற்றலுந் தாழ்ந்து தாளுறத்தொழுத மாருதிக் கினைய சொல்லுவான்’ (கம்பரா.8811)(வி. பா. படலம் 7 : 11. பக். 43, படலம் 9; பக். 82)