இரண்டடிகளோ பல அடிகளோ சொல்லளவில் ஒத்தும் பொருளளவில் வேறுபட்டும்வரும் மிறைக்கவி வகையாகிய மடக்கு.எ-டு :‘காம ரம்பயி னீரம துகரம்காம ரம்பயி னீரம துகரம்காம ரம்பயி னீரம துகரம்நாம ரந்தை யுறனினை யார்நமர்’ (தண்டி. 95 உரை)‘கா மரம் பயில் நீர மதுகரம் காமரம் பயில் நீர; மது கரம் காமர்அம்பு அயில் நீர; மது கரம் நாம் அரந்தை உறல் நினையார் நமர்’ எனப்பிரித்துப் பொருள் செய்யப்படும்.“சோலையின் மரந்தோறும் நெருங்கின வண்டினம் காமரம் என்னும் இசையைப்பாடுகின்றன; தேன் பொழியும் மதவேள் அம்புகள் வேலின் தன்மையும் உடன்உடையவாயின; வேனில் காலத்து (மது) எதிர்ப்பட்ட (கரம்) நாம் துயருறு வதைநம் காதலர் நினைவாரல்லர்” என்று பொருள்படும் இப்பாடற்கண், முதல்மூன்றடிகளும் சொல்லளவில் ஒத்துப் பொருளளவில் ஒவ்வாது வெவ்வேறு பொருள்பயக்க வந்தமையால் இது சமுற்கம் எனப்படும் மடக்காம்.