குருவும் லகுவும் வரிசையாகப் புணர்ந்து முழுதும் வரும் பாடலும்,முற்றக் குருவேயாயும் முற்ற இலகுவேயாயும் வரும் பாடலும் ஆம்.எ-டு : ‘போது விண்ட புண்ட ரீகமாத ரோடு வைக வேண்டின்ஆதி நாதர் ஆய்ந்த நூலின்நீதி ஓதி நின்மின் நீடு’முதலடி குருவும் லகுவும் வரிசையாகப் புணர்ந்து முழுதும்வந்தது.எ-டு : ‘காரார் தோகைக் கண்ணார் சாயல்தேரார் அல்குல் தேனார் தீஞ்சொல்போரார் வேற்கட் பொன்னே இன்னேவாரார் அல்லர் போனார் தாமே’இது முற்றக் குருவே வந்தது.எ-டு : ‘முருகு விரிகமலம்மருவு சினவரனதிருவ டிகடொழுமின்அருகு மலமகல’- முற்றவும் இலகுவே வந்தது. (யா.வி. பக். 523, 524)