சமநிலை மருட்பா

வெண்பாஅடியும் ஆசிரியஅடியும் ஒத்துவரும் மருட்பா வகை.எ-டு : ‘திருநுதல் வேர்அரும்பும் தேங்கோதை வாடும்இருநிலம் சேவடியும் தோயும் – அரிபரந்தபோகிதழ் உண்கணும் இமைக்கும்ஆகு மற்றிவள் அகலிடத் தணங்கே’ (பு.வெ.மா. 14-3)இதன்கண், வெண்பாஅடி இரண்டும் ஆசிரியஅடி இரண்டு மாக வந்தமையால் இதுசமநிலை மருட்பா.(யா. கா. 36 உரை)