சந்திரகணம்

நூல் முதற்சீரில் அமையுமாறு புளிமாங்காய் என்னும் வாய் பாடு. பற்றிவரும் கணம். இதற்குரிய நாள் மிருகசீரிடம். இதன் பயன் வாழ்நாள்.தருதல். (சீர்த்தி பயத்தல் என்னும் பன்னிரு பாட்டியல்). (இ. வி. பாட்.40 உரை)