சந்தம் தாண்டகம் பற்றியபிறர்கருத்து

காக்கைபாடினியாரும் பாட்டியலுடையாரும் வாய்ப்பிய முடையாரும்சந்தம், தாண்டகம் இவற்றை இனத்தின்பாற் படுத்து வழங்குவர்.தொல்காப்பியனார் முதலியோர் இவற் றையும் பாவினங்களையும்கொச்சகக்கலிப்பாற்படுத்து வழங்குவர்.வடமொழிவழித் தமிழாசிரியர்கள் “ஒருபுடை ஒப்புமை நோக்கி இனம்எனப்படா; மூவகைப்பட்ட விருத்தங்களுள் ளும் (ஆசிரியம், கலி, வஞ்சி)சந்த தாண்டகங்களுள்ளுமே எல்லாப் பாவினங்களும் அடங்கும்” என்பர். (யா.வி. பக். 487)