1. தேமா புளிமா புளிமாங்கனி, தேமா, தேமா என்ற 5 சீரடியுடையநான்கடிப் பாடல் பின்வருமாறு:எ-டு : ‘கால்வா னகத்தே குடைவெய்யவன் காய்க டுங்கட்கோல்மாய் கதிர்புல் லுளைகொல்சினக் கோளரிம்மாமேல்பால் மலையிற் புகவீங்கிருள் வேறி ருந்தமால்யானை யீட்ட மெனவந்து பரந்த தன்றே’ (கம்பரா. 882)‘நொய்தாங் குழவி யெனக்கொள்சில நோன்மை நாடின்வெய்தா மவுணக் குழுவோரினும் வெய்யன் யாரும்எய்தாத மாய முளனாலிவன் றன்னை வெம்போர்செய்தாடல் கொள்வ மிவணென்றுதெ ரிந்து சூழ்ந்தார்’(கந்தபு. I 14-42)‘மால்யானை யீட்டம்’, தேமா முன் நிரை வரவேண்டியவிடத்துத்தேமாங்காய் முன் நேர்வந்து ஓசை கெடாமல் நின்றவாறு.‘எய்தாத மாயம்’, ‘செய்தாடல்கொள்வ’ என்பனவும் அது.முதற்பாடல் நான்காமடியில் புளிமாவும் (பரந்த) தேமாவும் (யீட்ட)இடம் மாறி நின்றவாறு. ‘மெனவந்து’ என்று புளிமாங்காய் வந்தது.2. ஒரு சீராகவே தேமாவோ புளிமாவோ வரலாம் என்ற இடங்களில்புளிமாச்சீரின் முதல் எழுத்தைப் பிரித்து முன் சீருடன் கூட்டி அதனைத்தேமாவாகக் செய்வது கூடாது.‘சென்று கருத்தை யின்றே தேரினை வருதி என்றான்’ என்பதனைச்‘சென்றுக ருத் தை யின்றே தேரினை வருதிஎன்றான்’ எனப் பிரித்துப் புணர்ப்பது கூடாது.3. ஆயினும், மொழிகளின்வழியேதான் சீர்கள் செல்ல வேண்டும் என்னும்வரையறையின்மையின், மொழி முதலி லுள்ள எழுத்து முதற்சீர் இறுதியிலும்,மொழிக் கடையி லுள்ள எழுத்து அடுத்த சீர் முதலிலும் சேர்ந்து வகையுளியாகி ஓசைநயம் கருதி ஒலிக்கப்படலாம்.எ-டு : ‘இறந்தனர்பி றந்தபயன் எய்தினர்கொ லென்கோமறந்தனர றிந்துணர்வு வந்தனர்கொ லென்கோ’ (கம்பரா. 5291)எனவும்,எ-டு : ‘என்றென் றுயிர்விம் மியிருந் தழிவாள்மின்றுன் னுமருங் குவிளங் கிழையாள்’ (கம்ப.5237)எனவும் வருவன காண்க.4. மெய்யொலியைச் சந்தப்பாக்களில் தேவைப்பட்டபோது கொண்டு மற்றையஇடங்களில் நீக்கி விடலாம்.எ-டு : ‘நீ ண் டவிழி நேரிழைதன் மின்னினிற மெல்லாம்பூ ண் டதொளிர் பொன்னனைய பொம்மனிற மெய்யேஆ ண் டகைதன் மோதிரம டுத்தபொரு ளெல்லாம்தீ ண் டளவில் வேதிகைசெய் தெய்வமணி கொல்லோ’ (கம்ப. 5295)இவ்வொற்றுக்கள் நீக்கப்பட்டால்தான் இப்பாடல் வனமயூர விருத்தவிதிக்குப் பொருந்தும். (முதற்சீர்களிற் காணப்படும் ணகர ஒற்று)5. ஒரு மாத்திரை மிக்கோ குறைந்தோ வருவதால் ஒரு விருத்தத்தின் பெயர்மாறிவிடாது.எ-டு : ‘இனமுற என்ன வுள்ள கரத்தி லொன்ற தெனலாலி தென்னதெனலால்மனமுநீ யல்ல வென்ற வதனாலு முந்து மதியல்ல வந்த வகையே’.‘இனமுற’ என்பதனை அடுத்த ‘மனமுநீ’ என்பது ஒரு மாத்திரை மிக்கதேனும்எண்சீர்க் சந்தவிருத்த இலக்கணத்தில் திரியாது.எ-டு : ‘செய்தா யேனும் தீவினை யோடும்பழியல்லால்எய்தா தெய்தா தெய்தினி ராமன் னுலகீன்றான்.வைதா லன்ன வாளிகள் கொண்டுன் வழியோடும்கொய்தா னன்றே கொற்றமு டித்துன் குழுவெல்லாம்’. (கம்பரா.3249)இப்பாடலில் மூன்றாமடியின் இரண்டாஞ்சீர் ஏனை அடிகளின் இரண்டாம்சீர்போல 4 மாத்திரையாகாமல் 3 மாத்திரையாகக் குறைந்து நின்றதேனும் அஃதுஒன்றுபற்றி இம் மத்தமயூர விருத்தம் தவறு என்று கோடல் கூடாது.6. மாத்திரையே கணக்கிடப்படும் சந்தவிருத்தங்களில் நேரசைச் சீருக்குஅதே மாத்திரையுடைய நிரையசைச் சீரும், நிரையசைச் சீருக்கு அதேமாத்திரையுடைய நேரசைச்சீரும் மற்ற சீர்களுக்கு அவ்வளவே மாத்திரையுடையவேறுசீர் களும் சிறுபான்மை கொள்ளப்படலாம்.எ-டு : ‘மண்ணுளார் விண்ணுளார் மாறுளார் வேறுளார்எண்ணுளா ரியலுளார் இசையுளார் திசையுளார்கண்ணுளா ராயினார் பகையுளார் கழிநெடும்புண்ணுளா ராருயிர்க் கமுதமே போலுளார்’. (கம்பரா. 3788)இப்பாடலடிகளில் 2, 3, 4 ஆம் சீர்கள் நேருக்கு ஒப்பாக நிரையில்தொடங்கினும் 5 மாத்திரை என்னும் அளவினை மாறாமையின் ஏற்றுக்கொள்ளப்படும்.