அத்துவயோகம் என்னும் நில அளவு.விருத்தங்களைத் தரையில் பிரத்தாரம் செய்து வரைவதால் நிறையும்நிலத்தின் அளவு. எல்லாவகைச் சந்தங்களிலும் அமையும். பல்லாயிரக்கணக்கானவிருத்தங்களையும் விரற்கிடை போன்ற அளவுகள் வைத்து வரைவதால் அதன்பரப்பு இவ்வளவு என்று கூறும் அளவு எனும் தெளிவு பிரத்தியயம் ஆம்.இவ்விருத்தங்கள் சமம், விஷமம், அர்த்தசமம் என்னும் முறையில்பார்க்கும்போது கோடிக்கணக்கில் விரியும். இவற்றைத் தரையில்ஓரெழுத்திற்கு ஓரங்குலம் இடைவெளி விட்டு வரைந்துபார்க்க அவை அடையும்பரப்பின் அளவைப் பற்றிய இத்தெளிவில், ஒன்றையோ இரண்டையோ விடுவ தும்அல்லது கூட்டிக் கொள்வதும் போன்ற மாறுபட்ட கருத்துக்கள் வடமொழிநூல்களில் காணப்படுகின்றன. தமிழ்மரபிற்கேற்ப இது வீரசோழியத்திலும்யாப்பருங்கல விருத்தியிலும் கணக்கிட்டுக் கூறப்படுகிறது. விரற்கிடைகளைக் கூட்டிச் சாண் முழம் கோல் கூப்பீடு காதம் என்னும் நிலஅளவுகளும்கூறப்பட்டு. 26 எழுத்துள்ள ‘உற்கிருதி’ என்னும் சந்தத்திற்கு 699காதமும் 101 கோலும் 1 முழமும் 7 விரலும் என்று நிலஅளவைத் தொகையும்கொடுக்கப்பட் டுள்ளது. இதன் விரிவினை யா.வி. பக். 501-512 வரைகாண்க.சமம் – நான்கு அடிகளும் எழுத்தும் அலகும் ஒத்துவரும் விருத்தம்.வியமம் (விஷமம்) – நான்கு அடிகளும் தம்முள் ஒவ்வாது வரும்விருத்தம்.பாதிச் சமம் – (அர்த்தசமம்) முதலாம் அடியும் மூன்றாமடியும்ஒருவகையிலும், இரண்டாமடியும் நான்காம் அடியும் வேறு வகையிலும் வரும்விருத்தம். (வீ. சோ. 139)