அளவியற் சந்தங்களின் பெருக்கத் தொகையும் பரப்பும் தெளிதற்குத்துணையாகின்றமையின் இவை ‘தெளிவு’ எனப் பட்டன. அவை ஆறாவன : 1) உறழ்ச்சி(பிரத்தாரம்), 2) கேடு (நட்டம்), 3) உத்திட்டம் (இது நித்திட்டம்எனவும்படும்), 4) ஓர் இலகு உடையன, இரண்டு இலகு உடையன, ஒரு குரு உடையன,இரண்டு குரு உடையன என்றிவ்வாறு சந்தங்கள் அனைத்திற்கும்அமைத்துக்காட்டி (26 எழுத்துக்கள் கொண்டதாக)த் தொகை கூறுதல். (இதுவடமொழியில் ‘ஏக த்வி ஆதி லகுக்கிரியா’ எனப்படும். வடநூல் மரபில் ‘ல’எனும் எழுத்து இலகுவையும் ‘கு’ எனும் எழுத்து குருவையும் குறிக்கும்),(5) 26 எழுத்தளவும் உள்ள சந்தங்களின் விரிவினைக் காட்டி இத்தனை என்றுகூறும் விருத்தத் தொகை (ஸங்கியானம்), 6) நில அளவு (இச் சந்தங்கள்அனைத்தையும் குறித்த அளவுடன் நிலத்தில் வரைந்து பார்க்குங்கால்,ஒவ்வொன்றும் இத்தனை நிலப்பரப்பினைக் கொள்ளும் என்ற அளவு) என்பன. (வீ.சோ. 133 உரை)