நேரசை முதலாகத் தொடங்குமடி பதினோரெழுத்தும், நிரையசை முதலாகத்தொடங்குமடி பன்னீரெழுத்தும் கொண்டு வரும் கலிவிருத்தம் சந்தக்கலிவிருத்தமாம்.‘முன்றி லெங்கு முருகயர் பாணியும்சென்று வீழரு வித்திர ளோசையும்வென்றி வேழ முழக்கொடு கூடிவான்ஒன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம்’ (சூளா. 13)‘அணங்க னாரன ஆடல் முழவமும்கணங்கொள் வாரணக் கம்பலைச் செல்வமும்மணங்கொள் வார்முர சும்வயல் ஓதையும்இணங்கி எங்கும் இருக்குமோர் மாடெலாம்’. (சூளா. 15) (யா.வி. பக்.520)இவை முறையே அடி நேரசையிலும் நிரையசையிலும் தொடங்கி அடிக்குபதினோரெழுத்தும் பன்னீரெழுத்தும் பெற்று வந்தன.தமிழில் யாப்பில் கூறப்படும் தேமா புளிமா முதலிய சீர்களால்அமைக்கப்பட்டு மாத்திரை எண்ணிக்கைக்கும் பெரும்பான்மையும் ஒத்து வரும்கலிப்பாக்கள் சந்தக் கலி விருத்தமாம். இவை வடமொழி விருத்தங்களோடுஒருபுடை ஒத்து வருதலு முண்டு. (வி. பா. சந்தவிருத்தம் 5)I அ) நான்கு மாத்திரையுடைய தேமா புளிமாச் சீர்களால் ஆக்கப்பட்டநாற்சீரடி நான்கு கொண்டு வருவது :எ-டு : ‘நீரும் மலரும் நிலவும் சடைமேல்ஊரும் மரவம் முடையா னிடமாம்வாரும் மருவி மணிபொன் கொழித்துச்சேரும் நறையூர்ச் சீத்தீச் சரமே’ (தே. VII . 93-1)‘கொழித்துச்’ என்றசீர் 5 மாத்திரை; ஏனைய 4 மாத்திரை; யாவும்மாச்சீர்களே.ஆ) இக்கலி விருத்தம் இரட்டித்து எண்சீர் நாலடியாய் வருவதுண்டு.அதுபோது இஃது எண்சீர் ஆசிரிய விருத்த மாகும்.II அ. நான்கு மாத்திரையுடைய புளிமாச்சீர் நான்கு கொண்ட நான்குஅடிகளான் அமைவது; அடியிறுதி நெட்டெழுத் தாவதுஎ-டு : ‘வடிவே லதிகன் படைமா ளவரைக்கடிசூ ழரணக் கணவாய் நிரவிக்கொடிமா மதினீ டுகுறும் பொறையூர்முடிநே ரியனார் படைமுற் றியதே’. (பெரியபு. 41 : 27)(மாத்திரை கொண்டு நோக்கக் குற்றொற்று நெட்டெழுத்துப்போல்வதாம்)ஆ. நான்கு மாத்திரையுடைய புளிமாச்சீர் மூன்றும் இறுதிச் சீராகியபுளிமாங்காய் ஒன்றும் அமைந்த அடி நான்காய் வருவது.எ-டு : ‘பலவும் பயனுள் ளனபற் றுமொழிந்தோம்சுலவும் மயில்கா முறுபே டையொடாடிக்குலவும் பொழில்சூழ்ந் தகுரங் கணின்முட்டந்நிலவும் பெருமா னடிநித் தநினைந்தே’ (தே. I 31-6)‘பொழில்சூழ்ந்’ என்பது நீங்கலாக நாலடியிலும் முதல் மூன்றுசீர்களும் 4 மாத்திரை அளவின. அது சிறுபான்மைத்தாக 5 மாத்திரைகொண்டது.இ) இவ்வகையில் அடிதோறும் முதற்சீர் நேரசையில் தொடங்குவது.எ-டு : ‘சூலப் படையான் விடையான் திருநீற்றான்காலன் தனையா ருயிர்வவ் வியகாலன்கோலப் பொழில்சூழ்ந் தகுரங் கணின்முட்டத்தேலங் கமழ்புன் சடையெந் தைபிரானே’ (தே. I 31-3)ருயிர்வவ் – பொழில்சூழ்ந் – கமழ்புன் – நீங்கலான முதல் மூன்றுசீர்களும் நாலடியிலும் 4 மாத்திரை அளவின. இவை மூன்றும் சிறுபான்மையவாக5 மாத்திரை பெற்றன.