கொற்றியார்

கலம்பகம் என்னும் பிரபந்தத்துள் குறிப்பிடப்படும் அகத் துறைகளுள்இஃது ஒன்று. சிறந்த வைணவஅடியவர் வேடம் பூண்டு வைணவநாமத்தை நெற்றிமுதலான உறுப்புக்களில் தரித்துக்கொண்டு பிச்சையேற்க இல்லம்தோறும்வரும் இளம்பெண் ஒருத்தியின் வனப்பில் தனதுள்ளத்தைச் செல விட்ட காமுகன்ஒருவன் அவளது வடிவழகு தன்னை வருத்து வதாக எடுத்துக்கூறும் அகப்புறக்கைக்கிளைத் துறைப்பாடல்.எ-டு : மதுரைக்கலம்பகம். (பாடல். 36)