இடையிடையே தனிச்சொல் பெற்று ஈற்றடி குறைந்து வந்த மூன்று (சில)தாழிசை பெற்று வந்த குறைச் சிஃறாழிசைக் கொச்சகம் ஒன்று வருமாறு :(கொச்சகக் கலிப்பா வகை பத்தனுள் இதுவும் ஒன்று.)“மாயவனாய் முற்றோன்றி மணிநிரைகாத் தணிபெற்றஆயநீள் குடையினராய் அரசர்கள் பலர்கூடிமணிநின்ற மேனியான் மதநகையைப் பெறுகுவார்அணிநின்ற விடைகொண்டார் எனச்சொல்லி அறைந்தனரே (தரவு)தானவ்வழி, (தனிச்சொல்)எழுப்பற்றிச் சனந்துறுமி எவ்வழியும் இயமியம்பவிழுக்குற்று நின்றாரும் பலர்; (தாழிசை)ஆங்கே, (தனிச்சொல்)வாளுற்ற கண்ணாளை மகிழ்விப்போம் எனக்கருதிக்கோளுற்று நின்றாரும் பலர்; (தாழிசை)ஆண்டே, (தனிச்சொல்)இத்திறத்தாற் குறையென்னை இருங்கிளைக்கும் கேடென்னப்பற்றாது நின்றாரும் பலர்; (தாழிசை)அதுகண்டு, (தனிச்சொல்)மைவரை நிறுத்துத்தன் மாலை இயல்தாழக்கைவரை நில்லாது கடிதேற் றெருத்தொடிப்பஅழுங்கினர் ஆயம் அமர்ந்தது சுற்றம்எழுந்தது பல்சனம் ஏறுதொழு விட்டனகோல வரிவளை தானும்காலன் போலும் கடிமகிழ் வோர்க்கே” சுரிதகம் (யா.வி.பக்.332)