இது குணகாங்கியம் எனவும் வழங்கப்படும்; கன்னடமொழி யாப்பு நூல்.இதன் சூத்திரங்களில் அவையடக்கமாக ஒரு சூத்திரம் இருந்தமையும், இதன்சூத்திரங்கள் பல மகடூஉ முன்னிலையுடையனவாய் அமைந்தமையும்,யாப்பருங்கலக் காரிகையது பாயிரவுரையால் அறியப்படுகின்றன. இதன்கண்,சந்தச் செய்யுள்கள், தாண்டகச் செய்யுள்கள் என்னுமிவற்றின் இலக்கணங்கள்விரிவாக ஓதப்பட்டிருந்தன. (யா. வி. பக். 523)