கீழ்க்கதுவாய் நிரல்நிறை

நாற்சீரடியின் ஈற்றயற் சீராகிய மூன்றாம் சீரொழித்து ஏனைய சீர்களில்நிரல்நிறை அமைவது. முடிக்கப்படும் சொற்களை யும் முடிக்கும்சொற்களையும் முறை பிறழாது வரிசைப்பட நிறுத்துவது. (முறை) நிரல்நிறையாம்.எ-டு : “பொறையன் செழியன் பூந்தார் வளவன்கொல்லி கொற்கை நல்லிசைக் குடந்தைபாவை முத்தம் பல்லிதழ்க் குவளைமாயோள் முறுவல் மழைப்பெருங் கண்ணே.’இதன்கண், மாயோள் பொறையன் கொல்லிப்பாவை,(அவள்) முறுவல் செழியன் கொற்கை முத்தம்,(அவள்) கண்ணே வளவன் குடந்தைக் குவளை – என1, 2, 4 ஆம் சீர்களில் முறைநிரல்நிறை அமைந்தவாறு(யா. க. .95 உரை)