காஞ்சளபுரம்

பொன்‌ எனப்‌ பொருள்படும்‌ காஞ்சனம்‌ என்‌ற சொல்லடி யாய்ப்‌ பெயர்‌ பெற்றுள்ள ஊர்‌ காஞ்சனபுரம்‌. பொன்னுலகை (விண்ணுலகை)ச்‌ சேர்ந்தது போலும்‌. வெள்ளிமலையிலுள்ள “சேடி” என்ற வித்தியாதரருலகில்‌ உள்ளது காஞ்சனபுரம்‌ என்று இலக்கியம்‌ கூறுகிறது. “வடதிசை விஞ்சைமாநகர்த்‌ தோன்‌ றி” (மணிமே, 15:81) (வடதிசை விஞ்சைமாநகர்‌ வடதிசையிலுள்ள வித்தியாதர நகரமாகிய காஞ்சனபுரம்‌)
“மாசில்‌ வாளொளி வடதிசைச்‌ சேடிக்‌
காசில்‌ காஞ்சனபுரக்‌ கடிநகருள்ளேன்‌
விஞ்சையன்‌ தன்னோடென்‌ வெவ்வினை யுருப்பத்‌
தென்திசைப்‌ பொதியில்‌ காணிய வந்தேன்‌” (௸. 17:21.24)