வெண்பாவின் இறுதிச்சீர் உகர ஈற்று நேரீற்று இயற்சீராயின்,நேர்நேரான் வரும் இச்சீர்க்கு வாய்பாடு காசு என்பது.எ-டு : ‘யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையும் கல்லாத வாறு .’ (குறள் 397) (யா. கா. செய்.5)