களவியற்காரிகை

அகப்பொருள் பற்றிய செய்திகளைக் குறிப்பிடும் இந்நூல் அந்தாதிக்தொடையால் அமைந்த கலித்துறை நூற்பாக் களால் ஆகியது. இந்நூல் முதல் நடுஇறுதியாகிய மூவிடத் தும் சிதைந்துள்ளது. இறையறார் களவியற்குஅங்கமாவது.பாலைக்கருப்பொருள் பற்றிய கலித்துறையே, இதுபோது கிட்டியுள்ளவற்றுள்முதலாவது. உடன்போக்குவரையுமே இன்று கிட்டியுள்ளது. சுருக்கமான உரைதுறை விளக்கம் தருகிறது. உதாரணப்பாடல்களாகப் பாண்டிக்கோவை,திருக்கோவையார், பழம்பாடல்கள் ஆகியவையே அமைந் துள்ளன. இந்நூல்தமிழ்நெறி விளக்கத்தோடு பெரிதும் தொடர்புடையதாக உள்ளது.‘களவியற்காரிகை’ என்ற நூற்பெயர்தானும் பதிப்பாசிரியர் இட்ட பெயரேயாம்.அகப்பொருட் செய்திகள் பலவற்றை எடுத்துக்கூறும் இந்நூல் இந்நிலையிலும்ஓளரவு பயன்படுகிறது. தமிழ்ப் பேரறிஞர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள்பரிசோதித்து வெளியிட்ட பதிப்பு 1931 ஆம் ஆண்டு வெளிவந்தது.