கலி, ஆசிரியம் இவற்றில் வாராதசீர்கள்

தேமா, புளிமா – என்னும் நேரீற்றியற்சீர் இரண்டும் கலிப்பாவி னுள்புகப்பெறா; கருவிளங்கனி கூவிளங்கனி – என்னும் நிரை நடுவாகியவஞ்சியுரிச்சீர் இரண்டும் அதன்கண் வரப்பெறா.ஆசிரியப்பாவினுள்ளும் நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீர் இரண்டும்புகப்பெறா. (யா. கா. 40)வஞ்சிச்சீர்கள் அறுபதும், வெண்சீர் நான்கும், நேர்பு நிரை – நிரைபுநிரை அல்லாத ஆசிரிய உரிச்சீர் நான்கும் கட்டளை ஆசிரியப் பாவிற்குஉரியன அல்ல. (தொ. செய். 23 நச்.)